Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

3/03/2010

Nakeran News,



Source Nakkheeran.in











Click Here To Watch Video

2/25/2010

Dinamalar News



புதுடில்லி: ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்து சாதித்தது போன்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் 401 ரன்கள் எடுத்து, வெஸ்ட்இண்டீசின் லாராவின் (400*) சாதனையை, சச்சின் தகர்க்க வேண்டும் என்பது தான், ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (36). 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 17598 ரன்கள் குவித்துள்ள இவர், முதல் வீரராக 200 ரன்களை கடந்து (முந்தைய சாதனை, 194 ரன்கள்) சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் (46) எடுத்துள்ள வீரர்களில் முதலிடம் வகிக்கிறார்.
டெஸ்டில் "401':
தான் பங்கேற்ற 166 டெஸ்டில் சச்சின், 46 சதத்தின் உதவியுடன் இதுவரை 13447 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 248* ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்து சாதித்துள்ள சச்சின், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் லாராவின் (400*) சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.
"நூற்றுக்கு நூறு':
இவை தவிர சச்சின், சத்தமில்லாமல் மற்றொரு சாதனையையும் நெருங்கிக் கொண்டுள்ளார். அதாவது ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் (47) என இரண்டையும் சேர்த்து, இதுவரை 93 சதம் அடித்துள்ள சச்சின், விரைவில் இதிலும் சதம் (100) கடக்கவுள்ளார். இதுபோல 93 ஒருநாள் அரைசதம் அடித்துள்ள சச்சின், 100வது அரைசதத்தையும் விரைவில் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
விரைவில் எட்டலாம்:
இந்த ஆண்டு (2010) துவங்கி பிப்ரவரி 26 வரை, டெஸ்டில் 4, ஒருநாள் போட்டியில் ஒன்று, என மொத்தம் ஐந்து சதம் அடித்துள்ளார். இதே வேகத்தில் சென்றால் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 க்கு 100 கடந்து விடுவார்.
சேவக் வாய்ப்பு:
சச்சினின் 200 ரன், சாதனையை தற்போதுள்ள வீரர்களில் யாரால் முறியடிக்க முடியும் என பார்த்தால், நமது சேவக் தான் முன்னிலையில் இருக்கிறார். அதிரடி துவக்கவீரர் என்பதால், இவருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். இரண்டாவதாக "சிக்சர் மன்னன்' யுவராஜ் சிங் பெயர் அடிபடுகிறது. தனது சாதனயை சச்சினே தகர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Click Here To Watch Video

Dinamalar News


அவள் பெயர் தமிழரசி படம் 8 வயது முதல் 30 வயது வரையிலான வாழ்க்கை பதிவை சொல்லியிருக்கும் படம் என்று அதன் இயக்குனர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். படத்தின் நாயகன் ஜெய் 2 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். 8 வயதில் ஏற்படும் நட்பு, 30 வயது வரை எப்படி நீடிக்கிறது என்பதை தத்ருபமான பதிவாக படமாக்கியிருப்பதாக கூறும் டைரக்டர் மீராகதிரவன், இப்படத்தின் சூட்டிங்கை 2007ம் ஆண்டே தொடங்கி விட்டார். முதலில் டிரைலரை மட்டும் படமாக்கியிருக்கிறார். அதன்பிறகே மோசர்பியர் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது. முழுக்க முழுக்க வித்தியாசமான காட்சியமைப்புகளுடன் படமாகியிருக்கும் அவள் பெயர் தமிழரசி காதல், துரோகம், தண்டனை, வெற்றி, விடுதலை போன்ற பல்வேறு உணர்ச்சிகளை மையமாக கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இந்தியாவின் முக்கிய திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கரன், பிரபல ஓவியர் வீர சந்தானம், என் உயிர்தோழன் ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
Click Here To Watch Video

Dinamalar News


உணவுப் பொருட்களின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் அத்தியாவசிய பண்டங்களின் விலை மேலும் உயரும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. தவிர, அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு அளித்து வந்த ஊக்குவிப்பு சலுகைகள் சிலவற்றை, மத்திய பட்ஜெட் டில் விலக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசின் 2010-11ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டு வந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 9 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பு உள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத் துள்ளது. பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு, பல்வேறு துறைகளுக்கு தரப் பட்ட ஊக்குவிப்பு நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசு அளித்தது. தற்போது, 2009-10ம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது 8.2 சதவீதமாக உயரவுள்ளது. சேவைத் தொழில் வளர்ச்சி 8.7 சதவீதமாகவும் உள்ளது. ஆனால், விவசாயத் துறையின் வளர்ச்சி என்பது நெகட் டிவ் வளர்ச்சியாக மைனஸ் 2 சதவீதமாகக் காணப்படுகிறது. இருப்பினும், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி என்பது 7.2 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக, சில துறைகளுக்கு ஏற்கனவே அளித்து வந்த ஊக்குவிப்பு நிதி ஒதுக்கீடு உதவிகளை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம் எழுந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் என்பது கடந்த ஜனவரி மாதம் 17.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதில் ஆன கால விரயமும் தாமதமுமே. தேவைக்கு தகுந்த சப்ளை இல்லை. ஆயினும், டிசம்பர் மாதம் முதற்கொண்டே பணவீக்கம் உயரத் துவங்கியது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது, அரசுக்கு கவலையளிப்பதாக உள்ளது.

தென்மேற்கு பருவ மழை 1972ம் ஆண்டு தான் மிகவும் குறைவாக பெய்தது. இதற்கு அடுத்து, கடந்த ஆண்டு தான் தென்மேற்கு பருவ மழை மிகவும் குறைவாக பெய்தது. இந்த மழை பெய்வதற்கும் கால தாமதம் ஏற்பட்டது. உணவு தானிய உற்பத்தி என்பது 2009-10ம் ஆண்டு 98.83 மில்லியன் டன்னாக இருக்கும். இது 2008-09ம் ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருக் கும். உணவு தானிய உற்பத்தியின் நிர்ணய இலக்கு என்பது 125.15 மில்லியன் டன் ஆகும். இதன் காரணமாக அரிசியின் உற்பத்தி 15 சதவீதம் குறையும். பருப்பு உற்பத்தி 32 சதவீதம் குறையும். பருப்பு உற்பத்தி என்பது 4.42 மில்லியன் டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இருப்பினும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் வரை குறைவு. கரும்பு உற்பத்தி என்பது 249.48 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தி உற்பத்தி 236.57 லட்சம் டன் வரை இருக்கும். ஆயினும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 19 சதவீதம் இது குறைவு. ஏற்கனவே முடிந்த காரீப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பு 6.5 சதவீதம் குறைவாக இருந்தது.

பருப்பு சாகுபடியின் நிலப்பரப்பு 5.63 சதவீதம் குறைவாகவும், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி சாகுபடி நிலப்பரப்பு 5.15 லட்சம் எக்டேர் வரையிலும் குறைவாக இருந்தது. ஆனால், வரும் ராபி பருவத்தில் கோதுமை, பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றின் சாகுபடி நிலப்பரப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, நாட்டின் உணவு தானிய கையிருப்பு 47.4 மில்லியன் டன் வரை உள்ளது. இதில், அரிசியின் கையிருப்பு 24.3 மில்லியன் டன்னும், கோதுமையின் கையிருப்பு 23.1 மில்லியன் டன் வரையும் உள்ளது. அரிசி, கோதுமை ஆகியவற்றை இறக்குமதி செய்யாமலேயே இருக்கும் கையிருப்பை வைத்துக் கொண்டு, ரேஷன் கடை வினியோகங்களை சமாளித்து விட முடியும்.

ரேஷன் கடைகளின் உணவு தானிய தேவை என்பது 34.8 மில்லியன் டன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மின்சார உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கையாக, 2008-09ம் ஆண்டில் புதிதாக 7 ஆயிரத்து 530 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரைக் கும் 3 ஆயிரத்து 454 மெகா வாட் வரையில் தான் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது.

இதற்கு போதுமான எண்ணிக்கையில் கட்டுமானப் பொறியாளர்கள் கிடைக்காதது மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதில் எழுந்த சிக்கல்களுமே காரணம். கடன் வசதி செய்து தருவதில் தனியார் துறை வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் ஆகியவற்றைக் காட்டிலும் அரசுத் துறை வங்கிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-நமது டில்லி நிருபர்-
Click Here To Watch Video

Dinamalar News


வாஷிங்டன்: டொயாட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், தங்கள் நிறுவன கார்களில்'ஆக்சிலரேஷன் கருவியில்' ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏராளமான கார்கள் திரும்ப பெறப்பட்டதற்கு, அந்நிறுவனம் நேற்று அமெரிக்க பார்லிமென்ட் குழு முன் மன்னிப்பு கோரியது. டொயாட்டோ நிறுவனம் விற்பனை செய்த கார்களில்,'ஆக்சிலரேஷன் கருவி' செயல்பாடு சரியில்லாததால் ஏற்பட்ட விபத்துக்களில், அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமான விபத்துக்கள் குறித்தும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே, டொயாட்டோ நிறுவனம், உலகளவில் விற்பனை செய்த 85 லட்சம் கார்களை திரும்பப் பெற்றது. இதை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் குறைந்தது. இதையடுத்து, டொயாட்டோ நிறுவன கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த டொயாட்டோ நிறுவனத் தலைவர் ஆகியோ டொயாட்டோ கூறியதாவது: டொயாட்டோ நிறுவன கார்கள் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். டொயாட் டோ நிறுவனம், எப்போதும், அமெரிக்க மக்களின் நலனுக்காக பணியாற்றும். நான் மனப்பூர்வமாக இதை தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், இதை மக்கள் புரிந்து கொள்வார்களா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு ஆகியோ டொயாட்டோ கூறினார்.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் யூகியோ ஹட்டோயாமா கூறுகையில்,'டொயாட்டோ நிறுவன தலைவர், அமெரிக்க பார்லிமென்ட் குழு முன் ஆஜராகி, அவர்கள் நிறுவன வாகனங்களின் பாதுகாப்பிற்கு உறுதியளித்திருப்பது, நல்ல விஷயம். அவர், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து பேசி உள்ளார். இது கார்கள் மற்றும் மக்களின் வாழ்வை பாதிக்கும் விவகாரம், என்பதால் தேவைப்படும் இடங்களில், பாதுகாப்பை அதிகரிக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
Click Here To Watch Video

2/05/2010

Actor JeyaRam Mithu Valakku





Your Ad Here





Your Ad Here

Click Here To Watch Video

2/01/2010

Sun News Headlines 01-02-10




Your Ad Here





Your Ad Here

Click Here To Watch Video

12/27/2009

Sun News 27-12-09

Click Here To Watch Video

12/15/2009

Sun News 15-12-09

Click Here To Watch Video

Sun News 15-12-09


Click Here To Watch Video

11/17/2009

Sun News Headlines 17-11-09


Click Here To Watch Video

11/16/2009

sun news headlines 16-11-09


Click Here To Watch Video

11/14/2009

Sun News 14-11-09

Click Here To Watch Video

11/13/2009

Sun News 13-11-09


Link: 13 11 09 news

Click Here To Watch Video

11/12/2009

Sun News Headlines 12-11-09

Click Here To Watch Video

11/11/2009

Sun News Headlines 11-11-09

Click Here To Watch Video

11/10/2009

Sun News 10-11-09

Click Here To Watch Video

Sun News Headlines 10-11-09

Click Here To Watch Video

11/09/2009

Sun News Headlines 09-11-09

Click Here To Watch Video

Sun News 09-11-09

Click Here To Watch Video
Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here